கட்டுமானத்துறையில் செங்கல்களுக்கு மாற்றாக புதிய ஏ.ஏ.சி ப்ளாக் பைபர்சிமெண்ட் போர்ட்!!
கட்டுமானத்துறையில் செங்கல்களுக்கு மாற்றாக, புதிய ஏ.ஏ.சி ப்ளாக் பைபர் சிமெண்ட் போர்ட்களை, அறிமுகம் செய்த ரெனாட்டஸ் புரோக்கான் நிறுவனம், இனிவரும் அடுத்த 5 ஆண்டுகளில் பல்வேறு உச்சம் தொடும் என நம்புவதாக தெரிவித்துள்ளனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
செங்கல் சூளைகளில் இருந்து வெளியேறும் நச்சுபுகையால், மனிதர்களுக்கு அதிக அளவில் தீங்கு ஏற்படுகின்றது என்பதால், மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளில் செங்ல்கள் சூளைகளை மூடி, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பசுமை தீர்ப்பாயம் தொடுத்த வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில் கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கட்டுமானதுறைக்கு தேவையான செங்ல்கள்கள் வரத்து இல்லாமல், நீண்ட பற்றாக்குறையாகவே இருந்துவருகின்றது. இந்த நிலையில், செங்கல்களுக்கு மாற்றாக, நீடித்து உழைக்கும் தன்மையுடன், புதிய ஏ.ஏ.சி ப்ளாக் பைபர் சிமெண்ட் போர்ட்களை அறிமுகம் செய்தது ரெனாட்டஸ் புரோக்கான் நிறுவனம். இது குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு கோவை கோல்டு வின்ஸ் பகுதியில் உள்ள தனியார் உணவக அரங்கில் நடைபெற்றது. அப்பொழுது இது குறித்து பேசிய ரெனாட்டஸ் ரெனகான் நிறுவனத்தின் தலைவர், செல்வ சுந்தரம், நிறுவனத்தின் தொழில்நுட்ப இயக்குனர் மாணிக்க வாசகம், மற்றும் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி வெங்கடேசஷ் ஆகியோர் கூறியதாவது;
கட்டுமான துறையில் ரெனகான் நிறுவனம், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர், ஏ.ஏ.சி ப்ளாக் போன்ற கற்களை தயாரித்து இத்துறையில் புதிய புரட்சியே ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தற்போது பைபர் சிமென்ட் போர்ட் எனும் புதிய கண்டுபிடிப்புகளை அறிமுகம் செய்துள்ளது. இந்த நிறுவனமானது, செங்கற்களுக்கு மாற்றாக ப்ளை ஆஷ் எனும் அனல் மின் நிலையத்தில் இருந்து கிடைக்கும் கழிவு பொருட்களை கொண்டு ஏ.ஏ.சி ப்ளாக் தயாரிப்புகள், ரெனாகான் ராப்பிட் வால் எனும் ரெடி மேட் சுவர்களை வடிவமைத்துடன், பல்வேறு கட்டுமான களவைகளையும் தளங்களின் டைல்ஸ்களை ஒட்ட பயன்படுத்தும் பசை ஆகியவற்றையும் உருவாக்கியுள்ளது.
இந்த நிலையில் தற்போது பைபர் சிமென்ட் போர்ட் எனும் தயாரிப்புகளை அறிமுகம் செய்துள்ளது. இவை வழக்கமான ப்ளைவுட், ஜிப்சம் போர்டுகள் மற்றும் கால்சியம் சிலிக்கேட் வகை போர்டுகளுக்கு மாற்றாக அமையும் என தெரிவித்தனர். மேலும், இவ்வகை தயாரிப்புகள் அடுத்த இரண்டு ஆண்டுகளில் உள்நாட்டு சந்தையில், 5 முதல் 8 சதவிகிதம் சர்வதேச சந்தையில் தனக்கென உரிய இடத்தை கைபற்றும் என நம்புவதாக தெரிவித்தனர். மேலும் தெற்கு ஆசியா, மத்திய, கிழக்கு நாடுகள் போன்ற சர்வதேச சந்தைகளுக்கும் ஏற்றுமதி செய்ய உள்ளதாகவும் தெரிவித்தனர். இதனால், 2030ம் ஆண்டுக்குள் 350 கோடி வருவாயில் இருந்து 1000 கோடி வரை அதிகரிக்கும் என நம்புவதாகவும் தெரிவத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-சீனி, போத்தனூர்.
Comments