ஆறுமுகமங்கலம் வழிவந்த ஐகோர்ட் மகாராஜா கோவில் கொடை விழா மற்றும் 5ம் ஆண்டு சிறப்பு வழிபாடு!!

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலம், ஐகோர்ட் மகாராஜா கோவிலில் கொடை விழா 2025 ஆவணி மாதம் முதல் செவ்வாய்க்கிழமை (19/08/2025) நடைபெறும்.


நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்த விழாவானது, ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதத்தில் முதல் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படுகிறது. இதே நன்னாளில் விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் பெரியகடை பஜார் தெருவில் ஆறுமுகமங்கலம் வழிவந்த ஐகோர்ட் மகாராஜாவுக்கு ஆவணி மாதம் முதல் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் சிறப்பு அபிஷேகம் மற்றும் திரளை பூஜை நடைபெற்றது. 
புதன்கிழமை காலையில் சுவாமிக்கு சிறப்பு தீபாராதனையுடன் சைவ மற்றும் அசைவ படையல் இடப்பட்டது.

இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.கலந்து கொண்ட அனைவருக்கும்  அன்னதானம் வழங்கப்பட்டது.
பூஜை ஏற்பாடுகளை ஸ்ரீ மகாராஜா ஜுவல்லர்ஸ் ஸ்தாபகர் ஐயப்பன்  சிறப்பாக செய்திருந்தார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

கோவில்பட்டி செய்தியாளர் 
-ராஜ்குமார்.

Comments