புதிதாக நியமிக்கப்பட உள்ள கோவை மாவட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்த காங்கிரஸ் கட்சியினர்!!

கோவை: கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவை மாவட்ட காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர்கள் மாற்றம் செய்யப்பட்டனர். அதன்படி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவராக விஜயகுமார் வடக்கு மாவட்ட தலைவராக ரங்கராஜன் தெற்கு மாவட்ட தலைவராக சக்திவேல் ஆகியோர் நியமிக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகிறது இன்னும் முறையாக பொறுப்பு ஏற்கவில்லை. 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்த சூழ்நிலையில் புதியதாக நியமிக்கப்பட உள்ள நிர்வாகிகளுக்கு கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் கோவை மாநகர் மாவட்ட பொதுச் செயலாளர் ராம்கி மாவட்ட தலைவராக நியமிக்கப்பட்டுள்ள விஜயகுமாருக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் பழையூர் செல்வராஜ், ஹெச் எம் எஸ் மாநிலத் தலைவர் ராஜாமணி, வக்கீல் செந்தில் குமார் பாசமலர் சண்முகம் கருப்புசாமி உமர் கத்தார் மற்றும் நிர்வாகிகள் தொண்டர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர். மேலும் இதுகுறித்து நிர்வாகிகள் கூறுகையில் எங்களுக்கு இந்த வாய்ப்பை கொடுத்த கட்சி தலைமைக்கும் மூத்த தலைவர்களுக்கும் நாங்கள் எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-சீனி, போத்தனூர்.

Comments