தேசிய கராத்தே அணிக்கு காஞ்சிபுரம் வீரர் தேர்வு!!

காஞ்சிபுரத்தை சேர்ந்த கராத்தே வீரர் தாஸபிரகாஷ், தேசிய அளவிலான கராத்தே அணியில் விளையாட தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் கராத்தே சங்கம் சார்பில்,ஆசிய அளவிலான கராத்தே  விளையாட்டு போட்டியில் பங்கேற்க உள்ள தேசிய அணி வீரர்களுக்கான தேர்வு, இந்திய விளையாட்டு ஆணையம் சார்பில், மேகாலயா மாநிலம், ஷில்லாங் நகரில் கடந்த 12ம்  முதல் 14ம் தேதி வரை நடந்தது. இந்த தேர்வில், நாடு முழுவதிலும் இருந்து 140 சிறந்த வீரர்கள் பங்கேற்றனர். இதில், தமிழகத்தில் இருந்து, 5 பங்கேற்றனர். இதில், 4 பேர் தேசிய அணிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

தேர்வு செய்யப்பட்ட 4 பேரில், காஞ்சிபுரத்தை சேர்ந்த, தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் கராத்தே டூ அசோசியேஷன் சார்பில் பங்கேற்ற. காஞ்சிபுரத்தை சேர்ந்த கராத்தே வீரர் தாசபிரகாஷ், 60 கிலோ எடை இரண்டாவது பிரிவில் வெற்றி பெற்றதன் மூலம், தேசிய கராத்தே அணியில் விளையாட தேர்வு செய்யப்பட்டுள்ளார் என,  காஞ்சிபுரம்,  தலைமை பயிற்சியாளர் கராத்தே பாலா தெரிவித்தார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-ப. செந்தில் குமார்.

Comments