மாடு முட்டி முதியவர் படுகாயம்!! மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது
கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை தாலுக்காவில் உள்ள ஸ்டேன்மோர் எஸ்டேட் பகுதியில் பழைய சிந்தாமணி அருகாமையில் செங்குத்துப் பாறையில் இருந்து சக்திவேல் வயது 55 நடந்து வந்து கொண்டிருந்தார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அப்பகுதியில் வந்த வீட்டு மாடுகள் சக்திவேல் என்பவரை தாக்கியது. பகுதி மக்கள் விரைந்து வந்து மாட்டை விரட்டி விட்டு அவரை காப்பாற்றினார்கள். உடனே 108 வாகனத்தை வரவழைத்து வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவர் பலத்த காயம் அடைந்ததால் மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு 108 வாகனத்தில் அனுப்பி வைக்கப்பட்டது.
இதனால் அப்பகுதி மக்களிடையே மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
வால்பாறையில் இருந்து
-திவ்யக்குமார்.
Comments