பழமை வாய்ந்த கோவில் இடித்த காட்டு யானைக் கூட்டம்!!
கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை அடுத்துள்ள சேக்காமல் முடிப் பகுதியில் பழமை வாய்ந்த விநாயகர் கோவில் உள்ளது. இரண்டு தினங்களுக்கு முன்னாடி காட்டு யானைக் கூட்டம் அப்பகுதியில் உலா வந்தது. அப்பொழுது அந்த காட்டு யானைக் கூட்டம் விநாயகர் கோவிலை இடித்து தறை மட்டம் ஆக்கியது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதனால் அப்பகுதியில் அதிக அளவு உலா வரும் காட்டு யானைக் கூட்டங்களை வனவிலங்கு அதிகாரிகள் கண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கேட்டுக்கொள்கிறார்கள். அப்பகுதியில் உள்ள வீடுகளை சேதப்படுத்தும் காட்டு யானைக் கூட்டங்கள் இப்பொழுது கோவில்களில் இடிக்க தொடங்கி விட்டதா என பொதுமக்கள் மத்தியில் குற்றச்சாட்டாக எழுந்துள்ளது.
இதனால் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது
நாளைய வரலாறு செய்திகளுக்காக
வால்பாறையில் இருந்து
-பேபி.
Comments