விளாத்திகுளம் பேரூராட்சி தூய்மை வாகனம்மும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து!!

விளாத்திகுளம் - வேம்பார் செல்லும் சாலையில் விளாத்திகுளம் பேரூராட்சி தூய்மை வாகனமும் லாரியும் மோதிய விபத்தில் விளாத்திகுளம் பேரூராட்சியில் பணி புரியும் வேலிடுபட்டி கிராமத்தை சேர்ந்த தூய்மை பணியாளர் மாரியம்மாள் அவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

உயிரிழந்த திருமதி.மாரியம்மாள் அவர்களின் குடும்பத்தாரை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர்,சட்டமன்ற சட்ட விதிகள் ஆய்வு குழு தலைவர், தலைமை செயற்குழு உறுப்பினர் G.V.மார்கண்டேயன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்கள்.

மேலும் விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கார்த்திக், ராமலட்சுமி அவர்களை சந்தித்து அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவரிடம் கேட்டறிந்து உதவித்தொகை வழங்கினார்கள். 

நிகழ்வில் விளாத்திகுளம் பேரூராட்சி செயல் அலுவலர் சுப்பிரமணியன்  விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யா அய்யன்ராஜ் விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் வேலுச்சாமி விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு வடக்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் மகேந்திரன் வார்டு உறுப்பினர்கள் சுப்புராஜ், செல்வகுமார் வார்டு செயலாளர்கள் ஸ்டாலின்கென்னடி, அய்யனார்,மாரிராஜ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்

-பூங்கோதை நடராஜன்.

Comments