முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 9 தாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மலர் தூவி மரியாதை!!

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 9 தாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ



தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவின் 9 தாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இன்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினர் ஜெயலலிதாவின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர் இந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு  வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட  செயலாளரும் முன்னாள் அமைச்சர்ருமான கடம்பூர் ராஜ் எம் எல் ஏ ஆலோசனையின் பெயரில் விளாத்திகுளம் முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் தலைமையில் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை சேர்ந்த ஏராளமான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி அஞ்சலி செலுத்தினர்.

இதை ஒட்டி  நிகழ்வில் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி ஒன்றிய செயலாளர்கள் இராமச்சந்திரன் மகேஷ் பால்ராஜ் நகரச் செயலாளர் மாரிமுத்து மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர் பிரியா கழகப் பேச்சாளர் இளங்கோ உட்பட அதிமுக நிர்வாகிகள் சாந்தி ஆசைத்தம்பி சண்முகசாமி என பலர் கலந்து கொண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்தினர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்

-பூங்கோதை நடராஜன்.

Comments