கந்தர்வகோட்டை அருகே அக்கச்சிப்பட்டி நடுநிலைப்பள்ளியில் இரண்டாம் பருவம் மற்றும் அரையாண்டு தேர்வு தொடக்கம்!!
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
டிச18 கணிதம்,
டிச 19 உடற்கல்வி தேர்வு,
டிச 22 அறிவியல்,டிச 23 சமூக அறிவியல் உள்ளிட்ட தேர்வுகள் நடைபெறுகிறது.
முதல் நாள் நடைபெற்ற தமிழ் தேர்வு எழுதிய மாணவ மாணவிகள் தேர்வு எளிதாக இருந்ததாகவும் படித்த வினாக்கள் அனைத்தும் இடம் பெற்று இருந்ததாகவும்,மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.தலைமை ஆசிரியர் தமிழ்செல்வி தேர்வில் காண ஏற்பாடுகளை செய்திருந்தார். அறிவியல் பட்டதாரி ஆசிரியர் ரகமதுல்லா பேசும் போது மாணவ, மாணவிகளுக்கு தேர்வினை சிறப்பாக எழுத வேண்டும் என அறிவுரை வழங்கினார்.
தேர்வு மைய கண்காணிப்பாளராக ஆசிரியர்கள் மணிமேகலை, சிந்தியா, நிவின், செல்வி ஜாய்,ஜெம்ம ராகினி சகாய ஹில்டா உள்ளிட்டோர் செயல்பட்டனர்.கந்தர்வகோட்டை அருகே அக்கச்சிப்பட்டி நடுநிலைப்பள்ளியில் இரண்டாம் பருவம் மற்றும் அரையாண்டு தேர்வு தொடக்கம்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-ஈசா.
Comments