கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் பொறுப்பேற்பு!! அறங்காவலர் குழு தலைவராக ராஜகுரு தேர்வு

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருள்தரும் ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் உடனுறை ஸ்ரீ பூவனநாத சுவாமி திருக்கோவில் தென் தமிழகத்தில் புகழ் பெற்ற சிவாலயங்களில் மிக முக்கிய திருத்தலம் ஆகும். இந்தக் கோயிலின் அறங்காவலர் குழு உறுப்பினர்களின் பதவிக்காலம் கடந்த செப்டம்பர் 7ஆம் தேதியுடன் முடிவடைந்தது. அதன் பின்னர், கடந்த மூன்று மாதங்களாக இந்த கோயிலுக்கு அறங்காவலர் குழு உறுப்பினர்கள் நியமிக்கப்படவில்லை. 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்த நிலையில், ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர்களாக ராஜகுரு, திருப்பதி ராஜா, சண்முகராஜ், ரவீந்திரன், நிருத்திய லட்சுமி ஆகியோர் அறநிலையத்துறையினரால் நியமனம் செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, அறங்காவலர் குழு உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழா கோவில் அலுவலகத்தில் நடந்தது. 

இதில், அறநிலையத்துறை உதவி ஆணையர் செல்வி முன்னிலையில், புதிதாக நியமனம் செய்யப்பட்ட 5 உறுப்பினர்களும் பதவி ஏற்று கொண்டனர்.

பின்னர் அவர்கள் 5 பேரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். 

அதனைத் தொடர்ந்து, அறங்காவலர் குழு தலைவர் பதவிக்கான தேர்தல் நடந்தது.

இந்த தேர்தலில், அறங்காவலர் குழு உறுப்பினர் ராஜகுரு வெற்றி பெற்று, அறங்காவலர் குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பின்னர், செண்பகவல்லி அம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவராக ராஜகுரு பொறுப்பேற்றுக் கொண்டார். 

நிகழ்ச்சியில் பங்கேற்ற கோயில் செயல் அலுவலர் (பொ) பாலமுருகன், கோயில் தலைமை எழுத்தர் மாரியப்பன் மற்றும் கோயில் ஊழியர்கள் உள்ளிட்டோர், புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட அறங்காவலர் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

கோவில்பட்டி செய்தியாளர் 

- ராஜ்குமார்.

Comments