கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கட்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் என் எம் எம் எஸ் மாதிரி நடைபெற்றது!!

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு என் எம் எம் எஸ் மாதிரி தேர்வு நடைபெற்றது. தேர்வினை தலைமை ஆசிரியர் தமிழ்செல்வி தொடங்கி வைத்தார். தேர்வு அறை கண்காணிப்பாளராக கணித பட்டதாரி ஆசிரியை மணிமேகலை, சிந்தியா உள்ளிட்டோர் செயல்பட்டார். தேர்வினை அறிவியல் பட்டதாரி ஆசிரியர் ரகமத்துல்லா ஒருங்கிணைத்தார் ‌.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான தேசிய வருவாய் வழி திறன் படிப்பு உதவி தொகை தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. தேர்வில் கல்வி உதவித்தொகையாக மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. ஒன்பதாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் 48 மாதங்களுக்கு 48 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. எட்டாம் வகுப்பு தேசிய வருவாய் பள்ளி திறன் படிப்பு உதவித்தொகை தேர்வு இரண்டு பகுதிகளை கொண்டது. ஒன்று மன திறன் தேர்வு 90 வினாக்கள் கேட்கப்படும். 90 நிமிடங்கள் வழங்கப்படும். இரண்டாவது படிப்பறிவு திறன் தேர்வு இதற்கும் 90 மதிப்பெண் வழங்கப்படும் . இரண்டு மதிப்பெண்களின் சேர்த்து 180 மதிப்பெண்கள் தேர்வு நடைபெறும். தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-ஈசா.

Comments