இந்தியாவில் முதன்முறையாக செவிலியர்களுக்கான சர்வதேச 'டெய்சி' விருது! கோவை ராயல் கேர் மருத்துவமனை வரலாற்றுச் சாதனை
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
“எங்கள் செவிலியர் அணியை வலுப்படுத்துவதிலும், அவர்களுக்கு தொடர்ச்சியான ஆதரவை வழங்குவதிலும் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். நோயாளிகளை முழுமையாக குணப்படுத்த வேண்டுமெனில், முதலில் செவிலியர்களை அன்போடு கவனித்துக் கொள்ள வேண்டும்.""செவிலியர்களே நமது எதிர்காலம்"
செவிலியர் பிரிவின் இயக்குநர் டாக்டர் சியாமளா குமார் கூறியதாவது:
"செவிலியர்களுக்காக செய்யப்படும் ஒவ்வொரு முதலீடும், நோயாளிகளின் ஆரோக்கியத்தை நேரடியாக மேம்படுத்துகிறது. அவர்களின் அயராத சேவையை அங்கீகரித்து கொண்டாடுவது உண்மையான அதிகாரமளித்தலாகும். நல்ல பணிச்சூழல், மருத்துவமனையின் செயல்திறனை
உயர்த்துவதோடு, உயிர்களை காப்பாற்றும் அவர்களின் திறனை மேலும் கும் வலுப்படுத்துகிறது. செவிலியர்களே நமது எதிர்காலம்."
தமிழ்நாடு செவிலியர் கவுன்சிலின் பாராட்டு Tamil Nadu Nursing Council பதிவாளர் டாக்டர் சங்கர் சண்முகம் கூறியதாவது:
"செவிலியர்களின் பணி சோர்வைத் தடுப்பது, சுகாதாரத் துறையின் நீடித்த முன்னேற்றத்திற்கு மிக அவசியமானது. டெய்சி விருது போன்ற திட்டங்கள், அவர்களின் கடின உழைப்பை பாராட்டுவதோடு மட்டுமல்லாமல், நோயாளிகளின் வாழ்வில் அவர்கள் ஏற்படுத்தும் மறக்க முடியாத மாற்றங்களையும் கொண்டாடுகின்றன."டெய்சி விருது பெறும் செவிலியர்களுக்கு வழங்கப்படும் அங்கீகாரங்கள்
தி ஹீலிங் டச் சிற்பம்
ஜிம்பாப்வே கலைஞர்களால் கையால் வடிவமைக்கப்பட்ட இந்த சிற்பம், செவிலியர் மற்றும் நோயாளி இடையிலான அன்பான பிணைப்பை பிரதிபலிக்கிறது.
டெய்சி விருது பேட்ஜ்
செவிலியர்கள் தங்களது சீருடையில் அணியக்கூடிய, சர்வதேச அங்கீகாரத்தின் அடையாளமான சிறப்பு.சர்வதேச சான்றிதழ்
உலகளவில் அங்கீகரிக்கப்படும் சிறப்புச் சான்றிதழ்.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முயற்சியின் மூலம், ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, நோயாளிகளை மையப்படுத்திய மருத்துவ சேவையிலும், செவிலியர்களின் அர்ப்பணிப்பை கௌரவிப்பதிலும் இந்திய அளவில் புதிய முன்னுதாரணத்தை உருவாக்கியுள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-சீனி,போத்தனுர்.
Comments