பொள்ளாச்சி கிணத்துக்கடவு புதிய மேம்பாலத்தில் 60 லைட் ப்யூஸ்..!!

     -MMH


பொள்ளாச்சி கிணத்துக்கடவு புதிய மேம்பாலத்தில் 60 லைட் ப்யூஸ்..!!


          பொள்ளாச்சி கோவை வழி சாலையில் கிணத்துக்கடவு மேம்பாலம் புதிதாக கட்டி திறக்கப்பட்டு தற்ப்போது  வாகனங்கள் நெரிசல் இன்றி செல்லும் வகையில் தமிழக அரசு வசதிகளை செய்துள்ளது.



            மேம்பாலத்தில் உள்ள மின்விளக்குகள் அனைத்தும் எறிந்த நிலையில் ,ஒரு சில மாதங்களாக 30 க்கும் மேற்பட்ட மின்விளக்குகள் தற்போது எரியாமல் இருப்பதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உண்டாவதாக கூறுகின்றனர்.இதனால் பெரும் விபத்துகளும் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கூறுகின்றனர்.
கோடி கணக்கில்  மேம்பாலத்திற்கு செலவு செய்த அரசு, மின்விளக்குகளை மாற்றி தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.


நாளைய வரலாறு செய்திக்காக,


-V. ஹரிகிருஷ்ணன், பொள்ளாச்சி கிழக்கு.


Comments