கவுதம் கம்பீர் அதிரடி பேட்டி..!

      -MMH


2021-ம் ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட்டிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தோனியே நீடித்தால், அதில் ஆச்சரியமடைவதற்கு எதுவும் இல்லை. என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.


இணையதளத்துக்கு அளித்த அவர் கூறுகையில், தோனிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர்களுக்கும் இடையே புரிதல், நெருக்கமான உறவு, பரஸ்பர மரியாதை உள்ளது. டோனிக்கு அனைத்து விதமான முழு சுதந்திரத்தையும் அணி உரிமையாளர்கள் வழங்கியுள்ளனர்.


தோனி தாம் விரும்பும் வரை தொடர்ந்து விளையாடுவார். அந்த அணி நிர்வாகம் அளிக்கும் ஆதரவு, நம்பிக்கை காரணமாக தோனியும் மிகவும் விசுவாசமாக இருக்கிறா
சென்னை அணிக்காக கடின உழைப்பு, முயற்சி, வியர்வை, தூக்கமில்லா இரவு என்று அனைத்தையும் கொடுத்திருக்கிறார்' என தெரிவித்துள்ளார்.


-ஸ்டார் வெங்கட்.


Comments