பள்ளிகளுக்கு சுண்ணாம்பு அடிக்க வேண்டும்!! - முன்னாள் மாணவர்கள் வேண்டுகோள்!!
பொள்ளாச்சி வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளி சுண்ணாம்பு கூட அடிக்காமல் பழைய பாழடைந்த கிடங்கு போல் காட்சியளிக்கிறது என்று வேதனை தெரிவிக்கின்றனர் முன்னாள் மாணவர்கள்.
நோய்த்தொற்று பரவலால் பள்ளிகளுக்கு விடுமுறை உள்ள இந்த நேரத்தை பயன்படுத்தி சுண்ணாம்பு அடித்து பராமரித்து அழகாக வைத்திருந்தாள் மீண்டும் பள்ளி துவங்கும் நேரத்தில் மாணவர்கள் படிப்பதற்கு இடையூறின்றி இருக்கும்.
மேலும் உங்கள் வீட்டு பிள்ளைகளும் ஒரு நாள் இங்கு படிக்கலாம் என்பதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா என்ற கேள்வியை முன்னாள் மாணவர்கள் கேட்கின்றனர்.
நாளை வரலாறு செய்திக்காக,
-M.சுரேஷ்குமார்,கோவை தெற்கு.
Comments