சுனாமி தாக்குதலின் 16-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிப்பு..!!

-MMH

சுனாமி தாக்குதலின் 16-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிப்பு. தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மக்கள் அஞ்சலி

சென்னை: சுனாமி தாக்குதலின் 16-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இன்று தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி தமிழகத்தில் சென்னை, கடலூர், வேளாங்கண்ணி, நாகப்பட்டினம், கன்னியாகுமாரி உள்ளிட்ட பகுதிகளில் சுனாமி பேரலை தாக்கியது.

இந்த சுனாமி பேரலையால் தமிழகத்தில் மட்டும் 7 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இந்தியா முழுவதற்கும் 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழக்க நேரிட்டது. இந்த கொடிய நிகழ்வு நடந்து இன்றோடு 16 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இதை ஒட்டி இன்று தமிழகம் முழுவதும் 16-ம் ஆண்டு சுனாமி நினைவுதினம் அனுசரிக்கப்படுகிறது.

-பாலாஜி,ராஜசேகரன்.

Comments