தமிழக-கேரள எல்லைப் பகுதி சோதனைச் சாவடியில் ரெய்டு!! -

      -MMH

     பொள்ளாச்சி: தமிழக-கேரள எல்லைப் பகுதியான தமிழகத் குட்பட்ட  கோபாலபுரத்தில் வட்டார போக்குவரத்து சோதனைச் சாவடி அமைந்துள்ளது. இந்த சோதனைச்சாவடி வழியாக நாள் தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. இந்தச் சோதனை சாவடியில் லஞ்சம் பெறுவதாக தொடர்ந்து புகார் எழுந்த நிலையில் நேற்று இரவு லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி கணேஷ், ஆய்வாளர்கள் எழிலரசி, பரிமளாதேவி தலைமையிலான லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் மாறுவேடத்தில் வந்து கண்காணித்தனர்.

அப்பொழுது லாரி ஓட்டுநர்கள் இடம் கூடுதல் பணம் பெறுவது உறுதி செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனையடுத்து இன்று காலை ஆர்டிஓ சோதனைச் சாவடியில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கணக்கில் வராத  50000 ஆயிரத்தி 200 ரூபாய்  இருப்பது தெரியவந்தது இதனை அடுத்து மோட்டார் வாகன ஆய்வாளர் செந்தில், அலுவலக உதவியாளர் ஸ்ரீகாந்த், இடைத்தரகர் அம்பராம்பாளையம் பகுதியைச் சேர்ந்த நாசர் ஆகியோரிடம் தீவிர விசாரணை செய்து வருகின்றனர் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள். 

-M.சுரேஷ்குமார், கோவை தெற்கு.

Comments