கூட்டுறவு பால் வழங்கும் சங்கத்தின் சார்பில் கொண்டாடப்பட்டது மே தின விழா..!!
திருவாரூர்மாவட்டம் நீடாமங்கலத்தில் கூட்டுறவு பால் வழங்கும் சங்கத்தின் சார்பில் மே தின விழா கொண்டாடப்பட்டது.
இதில் அனைத்து சங்கத்தினரும் அவர் அவர்கள் சார்பில் கலந்துகொண்டு அவரவர்கள் சங்கத்தின் கொடியை ஏற்றி வீரவணக்கம் செலுத்தி விழாவை அலங்கரித்தனர்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற கொடியேற்ற விழாவில் நகர செயலாளர் திரு ஆர் ராஜசேகரன் அவர்கள் முன்னிலையில் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் திரு சோமு. செந்தமிழ்ச்செல்வன் அவர்கள் கொடியை ஏற்றி வைத்து கருத்துரை வழங்கினார்.
கழக முன்னோடிகள் திருமதி ராணி சேகர், வர்த்தக சங்கத் தலைவர் திரு. பி ஜி ஆர். ராஜாராமன் வெங்கட் அப்பு ராம்ராஜ் மற்றும் சங்க உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-திருமலை குமார், ரைட் ரபிக்.
Comments
தொழிலாளர் கட்சி தலைவர்களே, தயவுசெய்து உங்களை நீங்கள் பாதுகாத்துக் கொண்டால் தான்,உங்களது குடும்பமும் மற்றும் நமது தொழிலாளர்களை காப்பாற்ற முடியும்.