பெண் பிள்ளைகளின் சிறகுகளை முறிக்கும் காமக்கோடாரிகள் !! நாக்பூர் எழுத்தாளர் ஆர்.சுமதி காட்டம் !!

-MMH

                                  சீர்காழி எழுத்து சித்தர் சுமதி செளந்திரராஜன்.

தமிழகத்தின் சீர்காழியை சேர்ந்தவர் எழுத்தாளர் சுமதி செளந்திரராஜன். 1994 ம் ஆண்டு முதல் சிறுகதை, கவிதை, கட்டுரை எழுதி வருபவர். இவர் ஓவிய ஆசிரியர் என்றாலும் சமூகத்தின் சீர்கேடுகளை சீர்திருத்த எழுத்து தவம் செய்யும் பெண் ஞானி ! புரையோடிக் கிடக்கும் ஒழுக்கக் கேடுகளை சாடும் வார்த்தை பெண் சித்தர் !!

ஆசிரியர் ராஜகோபாலன்களை பொசுக்க வேண்டும் என பொங்குபவர் எழுத்தாளர் சுமதி. பெண்குலம் சிறகு முளைக்க சிந்திப்பவர். அவர்கள் சிறகு ஒடிக்கும் ராஜகோபால்களை விட்டு வைப்பாரா ? சீர்காழி எழுத்து சித்தர் சினம், காமப் பாடம் எடுத்த சென்னை பிஎஸ்பிபி பள்ளி ஆசிரியர் ராஜகோபால் போன்றவர்களை நோக்கி விடும் சாபம் பலிக்கட்டும் !!

எழுத்தாளர் சுமதியின் பேனாவில் கருப்பு மை - க்கு பதிலாக எரிமலைக் குழம்பை ஊற்றி எழுதியுள்ளாரோ? ஆபாச ஆசிரியர் தண்டனை விவகாரம் : தீர்வு என்ன ? சொல்கிறார், சமூக விஞ்ஞானி, எழுத்து நாயகி, கண்மணி பிரசவித்த படைப்பாளி சுமதி !! இனி படியுங்கள்...!! இன்றைய  துரோணாச்சாரியர்களில் சிலர் கட்டை விரலுக்கு பதில் கற்பை கேட்கும்  கொடூரம்  நடந்தேறி கொண்டிருக்கிறது.

அரை குறை ஆடையுடன் கற்பித்தல், ஆபாச அழைப்பு, அசிங்கமான  சீண்டல்  ஐந்தாண்டாய் அரங்கேற்றி  கொண்டிருக்கும்  காமுகன் ராஜகோபாலன் ! கடவுளுக்கு இணையான ஆசிரியர்  என்ற வார்த்தையை அவனுடைய பெயருக்கு  பின்னால்  சேர்க்க வே  கூசுகிறது. அடுப்பூதும் பெண்களுக்கு  படிப்பு  எதற்கு என்று  பெண்கல்விக்கு தடை போட்டதொரு காலம் !

ஆபாச வாத்தியார்கள் இருக்கிறார்கள்.  அடுப்படியிலேயே கிட என பெண்களை மீண்டும்  அடுப்படிக்கே போக வைத்துவிடுமோ என்ற  பயம்தான்  உண்டாகிறது. இப்படிப்பட்ட ஆசிரியர்கள்  எங்கள்  பெண் குழந்தைகளின் சிறகுகளை முறிக்கும் காம கோடாரிகள்! அறிவு பேசியோடு ஆணுக்கு நிகராக செயல்பட துடிக்கும் பெண்பிள்ளைகளை உடல் பசிக்கு  இரையாக்கத் துடிக்கும்  அரக்கன்கள் !

         குமுதம் இதழில் வெளியான சீர்காழி எழுத்தாளர் சுமதியின் களவாணி சிறுகதை.

சட்டம் தன் கடமையை சரியாக  செய்ய வேண்டும்.  தக்க தண்டனை தர வேண்டும்.  பணபலம், சாதி பலம், அரசியல் பலம் எதுவும்  நியாய தேவதையின்  தராசை தடுமாற செய்து விடக் கூடாது. இவனை போன்ற புல்லுருவிகளை வேரறுப்பது ஒரு  புறம். என்ன தான்  களைக்  களைந்தாலும் காலத்தால்  இவனை போன்ற  அசிங்கம் பிடித்த  அவதாரங்களை தடுக்க முடியாது.

வேலி  சரியில்லை  என  சொல் வதைவிட நாம் நெருஞ்சி முள்ளாக இருக்க வேண்டும். பெண்  குழந்தை களே... நீங்கள்  தைரியமாக  இருக்க வேண்டிய  நேரம்  இது. இப்படிப்பட்ட  காம பேய்களை யாருக்கும் பயப்படாமல்  இனம்  காட்ட வேண்டும்!

-தொகுப்பு : ஊடகவியலாளன் ஆர்.கே.பூபதி.

Comments