தனியார் பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் சேர்க்கை நடைபெறுகிறது !!
கோவை பீளமேட்டில் உள்ள நேஷனல் மாடல் உயர் நிலை பள்ளியில் இன்று தனியார் பள்ளிகளுக்கான ஆசிரியர்களை தேர்வு செய்யும் முகம் நடைபெற்றது. இதில் பல்வேறு இடங்களில் இருக்கும் 47 தனியார் பள்ளிகள் இடம்பெற்றுள்ளது.
பி எட். முடித்த ஆசிரியர்கள் பல்வேறு இடங்களிலிருந்து முகாமிற்கு வந்திருந்தனர். கரோனா காலத்தில் வேலைகள் இல்லாமல் தவித்த பி எட். மாணவர்களுக்கு இம்முகாம் பயனளிப்பதாக மாணவர்கள் மகிழ்ச்சியுடன் கூறுகின்றனர்.
-சா. பிரசாந்த்.
Comments