அடையாளம் தெரியாத வாகனம் மோதி மனநலம் பாதித்த முதியவர் பலி..!!
மேட்டுப்பாளையம் சிறுமுகை, கூத்தா மண்டி பகுதியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மனநலம் பாதித்த முதியவர் பலி.
கூத்தா மண்டி பகுதியில் சுமார் 70 வயது மதிக்கத்தக்க மனநலம் பாதித்த முதியவர் ஒருவர் கடந்த 3 மாதமாக அந்தப் பகுதியில் சுற்றித் திரிந்து வந்துள்ளார். அவருக்கு அந்த பகுதியை சேர்ந்தவர்கள் உணவு வழங்கிவந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 27ம் தேதி இரவு அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் முதியவர் பலியாகி உள்ளார். இச்சம்பவத்தை பற்றி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
-சாதிக் அலி.
Comments