கவுன்சிலர் மகன் தற்கொலை!! தூத்துக்குடியில் சோகம்!!

தூத்துக்குடியில் கவுன்சிலர் மகன் தூக்கிட்டுத் தற்கொலை செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தூத்துக்குடி கீழ சண்முகபுரத்தைச் சேர்ந்தவர் பொன்ராஜ். இவர்,  திமுக வட்டச் செயலாளராக உள்ளார். இவரது மனைவி பேபி ஏஞ்சலின் மாநகராட்சி கவுன்சிலராக உள்ளார். இந்த தம்பதியரின் மகன் கதிர்வேல் (25) டிப்ளமோ இன்ஜினியரிங் முடித்துள்ளார். தனியார் நிதி நிறுவனத்தில் வேலைபார்த்து வந்தார். 

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்நிலையில் இன்று காலை கதிர்வேல் தனது படுக்கையறையில் தூக்கில் தொங்கினார். இதையடுத்து குடும்பத்தினர் அவரை மீட்டு தூத்துக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

பின்னர் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராம் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-முத்தரசு கோபி, ஶ்ரீவைகுண்டம்.

Comments